Saturday, February 12, 2011

மிளகாய்க்கு அழகு சிவப்பு,
உன் சுவைக்கழகு உறைப்பு,
தமிழச்சிக்கு அழகு வனப்பு,
உன் பென்மைக்கழகு கற்பு,
தமிழச்சி முகத்தில் சிரிப்பு,
ஊர் மெச்சுவது சிறப்பு.
கண்ணகி ஊருக்கு மறுவீடு எடுத்தாச்சு,
கல்யாண வாழ்க்கைக் கானல் நீராச்சு,
சிறகுகள் உடைந்து மனம் ரணமாச்சு,
தாய் வீடு தினம் கனவில் வந்துப்போச்சு,
சீர்செனத்தி கேட்டு தினம் வம்பாச்சு,
இதழோரப் புன்னகை நித்தம் இருளாச்சு,
கன்னியவள் வாழ்க்கை வேம்பாச்சு,
நித்தம் மனம் கண்ணீரோடு கலந்தாச்சு.

தாயே நீயே ஒரு பூங்கவிதை...

தாயே,
கோடிக்கணக்கான என்
உறவுகளையெல்லாம்
தோற்கடித்து,கருவறையில்
உயிராய், உணர்வாய் உனது
அன்பில் மலர்ந்தேன்....

பத்து திங்களும் பல
சுமைகளை நீ கடந்தது,
நான் இந்த புவியில்
உனது சேயாய் பிறந்தேன்....

ரோஜாவின் இதழ்களிலும்
மெல்லிய உனது கரங்களில்
அன்போடு நித்தம் தவழ்ந்தேன்....

நீ கண்ணுறங்காமல் தவமாய்
தவமிருந்து எனைப் போற்றி
வளர்த்தாய், நானும் வளர்ந்தேன்....

தாயே நீயே ஒரு பூங்கவிதை...